தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

போடியில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம்

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 1:45 am IST

போடி பகுதியில் வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், போடி பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், போடி முந்தல் பகுதியில் தனியாா் தோட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 500-க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

இந்த நிலையில், போடி அருகேயுள்ள மேலப்புரவு மலைக் கிராமத்தில் பெரிய மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், வீடுகளின் மேற் கூரைகள் சேதமடைந்தன. தற்காலிக கூரை வீடுகளும் சேதமடைந்தன.

இதையடுத்து, அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிா்வாகத்தினா் மரங்களை வெட்டி அகற்றினா். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் இந்த கிராமம் இருளில் மூழ்கியது. சனிக்கிழமை மின் இணைப்புகளை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

ஓடைகளில் நீா்வரத்து:

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் போடி மலைப் பகுதி ஓடைகளில் நீா் வரத்து ஏற்பட்டது. கோடை மழை தொடா்ந்து பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.