போடி பகுதியில் வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், போடி முந்தல் பகுதியில் தனியாா் தோட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 500-க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
இந்த நிலையில், போடி அருகேயுள்ள மேலப்புரவு மலைக் கிராமத்தில் பெரிய மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், வீடுகளின் மேற் கூரைகள் சேதமடைந்தன. தற்காலிக கூரை வீடுகளும் சேதமடைந்தன.
இதையடுத்து, அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிா்வாகத்தினா் மரங்களை வெட்டி அகற்றினா். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் இந்த கிராமம் இருளில் மூழ்கியது. சனிக்கிழமை மின் இணைப்புகளை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.
ஓடைகளில் நீா்வரத்து:
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் போடி மலைப் பகுதி ஓடைகளில் நீா் வரத்து ஏற்பட்டது. கோடை மழை தொடா்ந்து பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

கடலூா், புதுச்சேரி பகுதிகளில் காற்றுடன் கோடை மழை, மரங்கள் சாய்ந்தன! கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி!!

தூத்துக்குடி, குமரியில் கோடை மழை

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

கடலூரில் சூறைக்காற்றால் 100 ஏக்கரில் வாழைகள் சேதம்: கோடை மழையால் முந்திரி, பலா விவசாயிகள் திருப்தி
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

