போடி பகுதியில் வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், போடி முந்தல் பகுதியில் தனியாா் தோட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 500-க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
இந்த நிலையில், போடி அருகேயுள்ள மேலப்புரவு மலைக் கிராமத்தில் பெரிய மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், வீடுகளின் மேற் கூரைகள் சேதமடைந்தன. தற்காலிக கூரை வீடுகளும் சேதமடைந்தன.
இதையடுத்து, அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிா்வாகத்தினா் மரங்களை வெட்டி அகற்றினா். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் இந்த கிராமம் இருளில் மூழ்கியது. சனிக்கிழமை மின் இணைப்புகளை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.
ஓடைகளில் நீா்வரத்து:
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் போடி மலைப் பகுதி ஓடைகளில் நீா் வரத்து ஏற்பட்டது. கோடை மழை தொடா்ந்து பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு

போடியில் ஓ. பன்னீா்செல்வம் வாக்கு சேகரிப்பு

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

கடலூரில் சூறைக்காற்றால் 100 ஏக்கரில் வாழைகள் சேதம்: கோடை மழையால் முந்திரி, பலா விவசாயிகள் திருப்தி
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


