விருதுநகர் நாகலட்சுமி அறக்கட்டளை சார்பில் நலிவடைந்த மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பாவாலி சாலையில் நாகலட்சுமி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தொழிலதிபர் மற்றும் அரிமா சங்கத்தின் செயலாளர் கே.பாண்டியன் தலைமை வகித்தார். பாவாலி ஊராட்சி மன்றத் தலைவரும், அறக்கட்டளையின் தலைவர் கே.நாகராஜன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் மோகன் வரவேற்புரை வழங்கினார். இதில், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி குத்துவிளக்கேற்றி நலிவடைந்தோருக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.
இதில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்லூரிகளில் உயர் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு வேறுபாடின்றி 40 பேருக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1 லட்சம் வரையில் வழங்கப்பட்டது. மேலும், இந்த அறக்கட்டளை சார்பில் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியின் வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் அமரும் வகையில் 20 பிளாஸ்டிக் சேர்களும் அளிக்கப்பட்டது. மேலும், கணவனை இழந்து வறுமையில் வாடும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.20 ஆயிரம் குடும்ப நல நிதியாகவும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் வணிக நகர் அரிமா சங்கத்தின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையைச் சேர்ந்த சின்னகாந்தி, ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

