மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

திருச்சுழி அருகே சாலை விபத்து: அரசு மருத்துவமனை வாகன ஓட்டுநர் சாவு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் ஆரம்ப சுகாதார நிலைய வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் ஆரம்ப சுகாதார நிலைய வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
    வீரசோழன் கிராமம் அருகே உள்ள என்.முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரது மகன் முகமது ரபீக்(44).இவருக்கு  மனைவி, மகள் உள்ளனர். முகமது ரபீக், நரிக்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக  வேன் ஓட்டுநராக பணியாற்றினார்.
   புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு என்.முக்குளத்திலிருந்து வீரசோழன் கிராமத்திற்கு  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வீரசோழன் அருகே சாலையில் நிலைதடுமாறிக் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீரசோழன்  காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி வீரசோழன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிணக்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.