இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இருசக்கர வாகன பிரசாரம்

விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட

Updated On :25 டிசம்பர் 2018, 6:41 am IST

விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.யூ.டி.) சார்பில் திங்கள்கிழமை சிவகாசி ஒன்றியப் பகுதிகளில் இரு சக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது.
சிவகாசி-சாத்தூர் சாலையில் மீனம்பட்டியில் தொடங்கிய இப் பிரசாரம், பேராபட்டி, அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், பாரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் வழியே சிவகாசி-விருதுநகர் புறவழிச்சாலையில் நிறைவடைந்தது.
பின்னர் அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கைகளை வலியுறுத்திய துண்டுப் பிரசுரங்கள்  வினியோகிக்கப்பட்டன. 
இதில்,சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன், சிவகாசி நகரச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.