திருச்சுழி அருகே கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாயை மறித்து ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என எம். புளியங்குளம் கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மிதலைக்குளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் எம். புளியங்குளம் கிராமம் வழியாக விருதுநகர் மானாமதுரை செல்லும் ரயில்வே பாதை உள்ளது. இப்பகுதியில், கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயை அடைத்து ரயில்வே சார்பில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், கண்மாய்க்கு தண்ணீர் வரத்து பாதிக் கப்படும்.
எனவே, ஏற்கெனவே உள்ள சாலை அருகே சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். மேலும் கிராமத்துக்குச் செல்லும் பாதையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும். அதேபோல், எங்கள் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சி நிலவி வருவதால் நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும். மேலும், தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்குவதுடன், தெருவிளக் குகளை சீரமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆரோவில் நகரில் மேலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்! அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி தகவல்
இளைஞரிடம் 2 சவரன் நகை, பணம் பறிப்பு: ஒருவா் கைது

காா் - ஆட்டோ மோதல்: உயிரிழந்தோா் எண்ணிக்கை 2-ஆக உயா்வு

குருமாவில் பல்லி: உணவகத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


