மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ராஜபாளையத்தில் மணிமேகலை மன்ற ஆண்டு விழா

ராஜபாளையத்தில் மணிமேகலை மன்றத்தின் 60 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:38 am IST

ராஜபாளையத்தில் மணிமேகலை மன்றத்தின் 60 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மன்றத்தின் நிர்வாகி கோபால்சாமி தலைமை வகித்தார். மணிமேகலை மன்றத்தின் 60 ஆம் ஆண்டு விழா மலரை டாக்டர் கணேசன் வெளியிட அதனை ராம்கோ குழும மேலாளர் ராஜ்குமார்  பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன் கலந்து கொண்டு பேசியது: ஒரு அமைப்பை நடத்துவது என்பது சாதாரணமான காரியமல்ல. அதுவும் 60 ஆண்டு காலம் நடத்தி மணிவிழா காண்பது என்பது மிகவும் பாராட்டத்தக்கது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஜெயகாந்தன் என பல்வேறு இலக்கியவாதிகள் ஏறிய மேடை இது. மேலும் விடுதலைப் போராட்டத்தில் ராஜபாளையத்தின் பங்கு மகத்தானது என்றார். மேலும் பி.எஸ். குமாரசாமி ராஜா, அரங்கசாமி ராஜாவை பற்றியும், கோதண்டம் ஆகியோரையும்  சிறப்பித்தும் பாராட்டினார்.
மேலும் ஆறு தமிழ் எழுத்தாளர்களுக்கு ரூ.5000 வீதம் விருது அளிக்கப்பட்டது. மேலும் 12 எழுத்தாளர்களுக்கு பாராட்டு விருது வழங்கியும்,  8 இலக்கிய சிற்றிதழ்களுக்கு பாராட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக தலைவர் கோ.மா.கோதண்டம் வரவேற்றார். வி.கே.பீமராஜா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை குறளமுதன்  செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.