வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பி.எஸ்.குமாரசாமி ராஜா பிறந்தநாள்

சென்னை மாகாண முன்னாள் பிரதமரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநரும், ராஜபாளையம் காந்தி கலை மன்ற நிறுவனருமான

Updated On :9 ஜூலை 2018, 1:26 am

சென்னை மாகாண முன்னாள் பிரதமரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநரும், ராஜபாளையம் காந்தி கலை மன்ற நிறுவனருமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 120 ஆவது பிறந்தநாள் விழா ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ராஜபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ராஜபாளையம் காந்தி கலைமன்ற அறங்காவலர்கள் என்.கே. ஸ்ரீகண்டன்ராஜா, பி.ஏ.பி. ராஜூ , பி.ஆர்.குமாரசாமி ராஜா முன்னிலையில் பெரியோர்கள், நகர் பிரமுகர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மாலையில் மதுரை தியாகராஜர் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் மு. அருணகிரி தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து காந்தி கலை மன்றம் பி.எஸ்.கே. ருக்மணியம்மாள் கலையரங்கில் நடந்த விழாவில் "வாழ்வாங்கு வாழ்வோம்' என்ற தலைப்பில் சென்னை இசைக்கவி ரமணனின் சொற்பொழிவு நடைபெற்றது.  காந்தி கலை மன்ற அறங்காவலர் பி.ஜெ.ராம்குமார் ராஜா வரவேற்றார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.