மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் சேதமடைந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :9 ஜூலை 2018, 1:34 am

அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் சேதமடைந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாளையம்பட்டி கிராமத்தின் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தை அடுத்துள்ள பெரிய கண்மாயின் கரை மீது பல ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பயன்பாட்டிற்கு வந்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே மின்மோட்டார் பழுது ஏற்பட்டு பல மாத இடைவெளிக்குப்பிறகு சீரமைக்கப்பட்டது. 
ஆனால் உரிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லை என்பதால் போதிய பராமரிப்பு இன்றி சுகாதார வளாகம் பயன்பாடற்றுப் போனது.  இதனால் இப்பகுதி பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே மகளிர் சுகாதார வளாகத்தைச் சீர்செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், ஆண்களுக்கும் தனியாக புதிய சுகாதார வளாகம் அமைத்துத்தரவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.