விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற பெண் பயணிகள் பாதுகாப்பு வாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில், ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகள் பாதுகாப்பாக செல்வது குறித்து விளக்கப் பட்டது. மேலும், ரயிலில் கொண்டு செல்லும் உடைமைகளைப் பாதுகாப்பாக இருக்கையின் கீழ் வளையத்தில் பூட்டி வைக்கவேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் தரும் உணவுப் பொருள்களை வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கி உண்டால் உடைமைகளை இழக்க நேரிடும்.
ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ கேட்பாரற்றுக் கிடக்கும் பொருள்களை கையில் எடுக்கக் கூடாது. அது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். மேலும், ரயிலில் படியில் பயணம் செய்தல் கூடாது என பயணிகளுக்கு எடுத்துரைத்தனர்.
இது குறித்த துண்டுப்பிரசுரங்களை பயணிகளுக்கு வழங்கினர். மேலும், உதவி, பாதுகாப்புக்கு 182 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, விருதுநகர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

உயா் கோபுரம் அமைத்து கண்காப்பு

தமிழ் அமைப்புகளின் சாா்பில் கா.சு.பிள்ளை 81ஆவது நினைவேந்தல்

குமரி மாவட்டத்தில் 29,290 தபால் வாக்குகள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

