சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிராமத்தில் வங்கி இணையதள சேவை சரிவர இயங்காததால் வாடிக்கையாளர்கள் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமத்தில் வங்கியில் இணையதள இணைப்பு மற்றும் கணினிகள் சரியாக இயங்காததால் கட

News image
Updated On :14 மே 2018, 7:02 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமத்தில் வங்கியில் இணையதள இணைப்பு மற்றும் கணினிகள் சரியாக இயங்காததால் கடந்த 8 மாதங்களாக வாடிக்கையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்குளம் கிராமத்தற்கான கனரா வங்கியின் கிளை பெருமாள்தேவன் பட்டியில் உள்ளது. கடந்த 8 மாதங்களாகவே இந்த வங்கியில் இணையதள இணைப்பு மற்றும் கணினி சரியாக செயல்படவில்லை எனக் கூறி பொதுமக்களை வங்கி அலுவலர்கள் அலைக்கழிப்பு செய்கிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்கள் பணம் போட முடியாமலும், பணம் எடுக்க முடியாமலும், நகைக்கடன் வைக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.திங்கள்கிழமையும் இதே நிலையே காணப்பட்டது.
17 ம் தேதி வியாழக்கிழமை வரும்படி வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த வங்கியில் வேப்பங்குளம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி,வைத்தியலிங்காபுரம், படிக்காசுவைத்தான்பட்டி, கீழப்பொட்டல்பட்டி, வடக்கு கரிசல்குளம், இனாம்கரிசல்குளம், லட்சுமியாபுரம், காமராஜர் நகர், இடைய பொட்டல்பட்டி, நூர்சாகிபுரம், அழகு தெய்வேந்திரபுரம், பாலசுப்பிரமணியாபுரம், கங்காகுளம், துலுக்கன்குளம், கன்னார்பட்டி, கன்னார்பட்டிகாலனி, பெருமாள்தேவன்பட்டி, பிள்ளையார்குளம், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வங்கிக் கணக்கு வைத்துள்ளார்கள். கிராம மக்கள் ஒவ்வொரு முறையும் வங்கிக்கு வந்து வேலை முடியாமல் திரும்புவதால், நாள் முழுவதும் வீணாகிறது என தெரிவித்தனர் . ராணுவ கிராமம் என்று கூறப்படும் பெருமாள்தேவன்பட்டியில் உள்ள நூற்றுக் கணக்கான முன்னாள் ராணுவத்தினர், ஓய்வூதியதாரர்களும் வங்கி சேவையை பயன்படுத்த இயலாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பொதுமக்கள், ஓய்வூதியதாரரின் நேரத்தையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு, வங்கியின் சேவை தடையின்றி கிடைத்திடவங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.