தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் மீது தாக்குதல்: ஒருவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணைத் தாக்கியவர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On :14 மே 2018, 7:04 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணைத் தாக்கியவர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மம்சாபுரம், அமச்சியார்பட்டியைச் சேர்ந்தவர் கா.வேலு (51). இவரது மனைவி வே.லட்சுமி (45). இவர்களுக்கும் அருகே குடியிருக்கும் ல.கோவிந்தராஜ் என்பவருக்கும் பொதுச் சுவர் தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வீட்டின் வெளியே மகன் ஆனந்தராஜூடன் நின்று லட்சுமி பேசிக் கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த கோவிந்தராஜ், இருவரையும் ஆபாசமாகப் பேசி, கம்பால் லட்சுமியை அடித்துக் காயப்படுத்தியுள்ளார். இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் வேலு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.