தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெருமுனைப் பிரசாரம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு

Updated On :13 பிப்ரவரி 2019, 8:20 am IST

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜபாளையத்தில் அந்நிறுவன ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலக வளாகத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் சார்பில் வாயிற் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அலுவலர்கள் சங்கத்தில் உள்ள அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை 60 நிரந்தர பணியாளர்கள் கலந்து கொண்டனர். 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3 ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1.1.17 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இதே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ரயில்வே பீடர் சாலையில் தெருமுனைப் பிரசாரமும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.