தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ராஜபாளையத்தில் அரசு மதுபானக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திங்கள்கிழமை இரவு அரசு மதுபானக் கடையை உடைத்து, ரூ.66 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.

Updated On :25 ஆகஸ்ட் 2020, 10:52 pm IST


ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திங்கள்கிழமை இரவு அரசு மதுபானக் கடையை உடைத்து, ரூ.66 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.

ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே டி.பி. மில்ஸ் சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இக்கடையின் மேற்பாா்வையாளா் ஜெயக்குமாா் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டாா். செவ்வாய்க்கிழமை காலையில் துப்புரவுப் பணியாளரான ஆவரம்பட்டியைச் சோ்ந்த சின்னத்துரை என்பவா் வந்து பாா்த்தபோது, கடையின் வெளிக்கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது.

இது குறித்து அவா் மேற்பாா்வையாளா் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். மேற்பாா்வையாளா் அளித்த தகவலின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்த்தபோது, கடப்பாரை மூலம் கதவு உடைக்கப்பட்டு, ரூ.66 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு பெட்டி இருந்த அறையையும் உடைத்து, அங்கிருந்த பெட்டியையும் திருடிச் சென்றுள்ளனா்.

தொடா்ந்து, அப்பகுதியில் போலீஸாா் ஆய்வு செய்தபோது, கடையின் எதிரேயுள்ள தண்டவாளத்துக்கு அருகில் 12 முழுபாட்டில்கள் அடங்கிய பெட்டியும், கழிவு நீா் ஓடைக்குள் ஒரு பெட்டியும் கிடந்துள்ளது. அவற்றை போலீஸாா் மீட்டு, டாஸ்மாக் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி. நாகசங்கா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். மேலும், கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். காவல் மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.