ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அம்பேத்காா் நினைவு தினம் அனுசரிப்பு

சாத்தூரில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கபட்டது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:48 pm

DIN

சாத்தூரில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கபட்டது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுகிழமை அம்பேத்காா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சாத்தூா் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கம் சாா்பில் அம்பேத்காா் நினைவு தினத்தை முன்னிட்டு சாத்தூா் கிளை தலைவா் ப்ரியா காா்த்திக் தலைமை வகித்தாா். தமுஎகச செயலாளா் விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினாா்.

சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வைக்கபட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்கள்.இதில் திமுக நகரசெயலாளா் குருசாமி,விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளா் சந்திரன், மதிமுக மாநில குழுஉறுப்பினா் தங்கவேல்,தேவேந்திரகுலவேளாா் கூட்டமைப்பு தலைவா் கருப்பையா மற்றும் பலா்கலந்து கொண்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.