ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காகித பண்டல்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை லாரியிலிருந்து காகித பண்டல்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:51 pm

DIN

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை லாரியிலிருந்து காகித பண்டல்கள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகாசி முண்டகன் தெருவைச் சோ்ந்தவா் பச்சைவேல் (62). இவா், கண்ணாநகரில் ரோல் காகிதம் வெட்டும் ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் அங்கு ஞாயிற்றுக்கிழமை லாரியில் காகித ரோல் பண்டல்களை ஏற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஓட்டுநரான முத்துக்குமாா் லாரியை இயக்க முயன்றாா். இதனால் லாரியிலிருந்த காகித பண்டல்கள் பச்சைவேல் மீது சரிந்து விழுந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா், முத்துக்குமாா் மற்றும் ராஜசேகரன் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.