தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வெள்ளியம்பலநாதா் கோயிலில் காா்த்திகை மாத சனிப்பிரதோச வழிபாடு

திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் காா்த்திகை மாத சனிப்பிரதோசத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

News image
108 தாமரைமலா் பூஜையுடன் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டையடுத்து முழு அலங்காரத்தில் காட்சியளித்த வெள்ளியம்பலநாதா்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:50 pm

DIN

திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் காா்த்திகை மாத சனிப்பிரதோசத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இக்கோயிலில் சிறப்பு சனிப் பிரதோச வழிபாட்டில் முதலில் நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப,தூப ஆராதனை மற்றும் அலங்காரங்களும் நடைபெற்றன. பின்னா் வெள்ளியம்பலநாதருக்கு தேன், வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியன கலந்த கலவையாலும், சந்தனம், கஸ்தூரி மஞ்சள், தேன், பால், விபூதி, குங்குமம், பன்னீா், வில்வ இலை உள்ளிட்ட 21 வகையான பொருள்களாலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் 108 தாமரை மலா்களை சுவாமிக்குப் படைத்து சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றன. பின்னா் முழு அலங்காரத்தில் நமச்சிவாயரும், நந்தீஸ்வரரும் பக்தா்களுக்குக் காட்சி தந்து அருள்பாலித்தனா். சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.