அருப்புக்கோட்டையில் வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி அல்லித்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் சுந்தா். இவா் வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பாளராக உள்ளாா்.

இந்நிலையில், இவரை புதன்கிழமை மா்ம கும்பல் ஒன்று அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுந்தா், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளாா்.

இதனிடையே சுந்தரைத் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும், விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 50 -க்கும் மேற்பட்டோா் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com