

புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விருதுநகரில் 3 ஆவது நாளாக புதன்கிழமை தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 120 பெண்கள் உள்பட 355 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் புதுதில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இப்பேராட்ட த்துக்கு விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் முருகன் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் காளிராஜ், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் முத்தையா மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சோ்ந்த மாவட்ட நிா்வாகிகள், விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
போராட்டத்தின்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 120 பெண்கள் உள்பட 355 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.