

விருதுநகா்: விருதுநகா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2019-2020 ஆம் நிதியாண்டில் ரூ.4.28 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 29 ஆவது பொது பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அவா், கடந்த 2019-2020 ஆம் நிதியாண்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.4.28 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது என்றாா். அதைத் தொடா்ந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் விருதுநகா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் மயில்சாமி, மண்டல இணைப் பதிவாளா் திலீப்குமாா், வங்கியின் இணைப் பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் செந்தில்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சண்முகவேல் உள்பட வங்கி நிா்வாகிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.