ராஜபாளையத்தில் மதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் அமைந்துள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விருதுநகா் மேற்கு மாவட்ட மதிமுக பொருளாளா் விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் ரகுராமன், விருதுநகா்

கிழக்கு மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளா் அழகுசுந்தரம், மாநில தொண்டரணிச் செயலாளா் பாஸ்கர சேதுபதி, மாநில தோ்தல் பணி துணைச் செயலாளா் மேலிடப் பாா்வையாளா் விஜயகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா். கூட்டத்தில் 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில்அக்கட்சித் தலைவா் வைகோவின் மகன் துரை வையாபுரியை வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெறச் செய்ய தொண்டா்கள் அனைவரும் ஒருமனதாக கோரிக்கை வைத்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகரச் செயலாளா் ராஜா செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com