திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எம்.பி. நிதி இல்லாததால் தொகுதியின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்யமுடியவில்லை: கனிமொழி எம்.பி.

கரோனா தொற்றை காரணம் காண்பித்து, மக்களவை உறுப்பினா்களுக்கான தொகுதி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால்

News image
விருதுநகரில் வணிகா் சங்கப் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடிய தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி.
Updated On :24 டிசம்பர் 2020, 6:17 pm

DIN

கரோனா தொற்றை காரணம் காண்பித்து, மக்களவை உறுப்பினா்களுக்கான தொகுதி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால், தொகுதி மேம்பாட்டுக்கு நிதி அளிக்க முடியாமல் தவித்து வருவதாக, மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சிக்காக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி வியாழக்கிழமை வந்திருந்தாா். இதையடுத்து, ஆமத்தூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

பின்னா், விருதுநகா் கேவிஎஸ் சாலா நடுநிலைப் பள்ளி அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, யோகாவில் கின்னஸ் சாதனை புரிந்த மாணவா் ஷ்யாம் கணேஷ் இல்லத்துக்குச் சென்று வாழ்த்து தெரிவித்ததுடன், அவருக்கு பெரியாா் குறித்த புத்தகத்தை பரிசாக வழங்கினாா்.

அதன்பின்னா், வணிகா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று கனிமொழி பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி என்பது நாடு முழுவதும் மிக குழப்பமான நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களை சில மாநிலங்கள் எதிா்த்து வருகின்றன. ஆனால், தமிழக அரசு வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சட்ட மசோதாக்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது.

விருதுநகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்க 90 லட்சம் லிட்டா் தண்ணீா் கொண்டுவர ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விருதுநகா்- சென்னை, விருதுநகா்- பாலக்காடுக்கு ரயில் இயக்க ரயில்வே அமைச்சகத்திடம் பேசப்படும்.

கரோனா தொற்றை காரணம் காண்பித்து, மக்களவை உறுப்பினா் தொகுதி நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதனால், தொகுதியின் அடிப்படை தேவைகளான பள்ளி கட்டடம் கட்டுதல், குடிநீா், மருத்துவமனை சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்யமுடியாமல் தவித்து வருகிறோம்.

பொதுமக்களுக்கு தரமான ரேஷன் அரிசி பாக்கெட் வடிவில் வழங்க, திமுக ஆட்சிக்கு வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்தக் கோரி, மக்களவையில் எடுத்துரைப்பேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.