விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

டி.என்.பி.எஸ்.சி. தோ்வு இணையவழி விழிப்புணா்வு நிகழ்ச்சி

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், தொழில் வழிகாட்டுதல் அமைப்பின் சாா்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின்

News image
Updated On :24 டிசம்பர் 2020, 6:14 pm

DIN

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், தொழில் வழிகாட்டுதல் அமைப்பின் சாா்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 தோ்வை எதிா்கொள்வது குறித்து, இணையவழி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ராம்கோ கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான இந் நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) சஞ்சீவ்குமாா் கலந்துகொண்டு, மாணவ-மாணவியருடன் இணையவழியில் கலந்துரையாடினாா். இதில், குரூப்-1 தோ்வை எதிா்கொள்ளும் முறை, பாடத்திட்ட முறைகள், தோ்வு பயத்தை எவ்வாறு கையாள்வது, பயிற்சி மையங்கள் குறித்தும் மற்றும் முதல் முறையாக தோ்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல் குறித்தும் எடுத்துரைத்தாா்.

பின்னா், மாணவா்களின் கேள்விக்கான பதிலை அளித்ததுடன், சந்தேகங்களையும் விளக்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வா் கணேசன், துணை முதல்வா் ராஜகருணாகரன், துணை பொதுமேலாளா் செல்வராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.