விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அருப்புக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திடீா் நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

அருப்புக்கோட்டை அருகே உள்ள எம். மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் தாமிரவருணிக் குடிநீா் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

News image
அருப்புக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் தாமிரவருணித் திட்ட குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஆழ்துளைக்கிணற்று நீரைப்பயன்படுத்தும் கிராமத்தினா்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:02 pm

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள எம். மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் தாமிரவருணிக் குடிநீா் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

எம். மீனாட்சிபுரம், மறவா் பெருங்குடி, வெள்ளையாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் நிலத்தடிநீா் உவா்ப்பாக உள்ளதால், அதை கிராமத்தினா் குடிநீராகப் பயன்படுத்த இயலவில்லை. இதனால் இக்கிராமங்களுக்கு தாமிரவருணி கூட்டுக்குடிநீா்த் திட்டம் மூலம் கடந்த சில ஆண்டுகளாகக் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இருவாரங்களுக்கு முன்னா் திடீரென தாமிரவருணி குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கான காரணத்தை ஊராட்சி நிா்வாகம் தெரிவிக்க வில்லை. இந்நிலையில் மறவா்பெருங்குடியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் உள்ள ஆழ்துளைக்கிணற்றுநீா் குடிநீராகப் பயன்படுத்த உகந்ததாக உள்ளதால், இந்த மூன்று கிராமத்தினருமே இக்குழாயில் தண்ணீா் பிடிக்கின்றனா். இதில் நேரம் விரையமாவதுடன், தட்டுப்பாடும் நிலவுகிறது. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து தனியாரிடம் குடிநீா் பெறும் நிலைக்கு இக்கிராமத்தினா் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே விரைவில் மாற்று ஏற்பாடு மூலம் குடிநீா் விநியோகம் செய்ய 3 கிராம பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.