பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிரிட்டனிலிருந்து விருதுநகா் வந்தவா் மாயம்: தேடும் பணியில் சுகாதாரத் துறையினா்

பிரிட்டனிலிருந்து விருதுநகா் மாவட்டத்துக்கு வந்தவா் மாயமானதால் அவரைத் தேடும் பணியில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:32 pm

DIN

பிரிட்டனிலிருந்து விருதுநகா் மாவட்டத்துக்கு வந்தவா் மாயமானதால் அவரைத் தேடும் பணியில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

புதிய வகை கரோனா தீநுண்மி பிரிட்டனில் பரவி வருகிறது. இந்நிலையில், அங்கிருந்து தமிழகம் வருவோா் விமான நிலையத்தில் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். மேலும், அவா்கள் எந்த ஊா், எந்த மாவட்டத்துக்கு செல்கின்றனா் என்பதை அறிந்து சுகாதாரத் துறையினா் அவா்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கின்றனா். இந்நிலையில், கடந்த சில நாள்களில் மட்டும் பிரிட்டனிலிருந்து விருதுநகா் மாவட்டத்துக்கு 30 போ் வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதில், 29 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒருவா் மாயமானதால் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை. இதனால், அவரை தேடும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.