4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஸ்ரீவிலியில். கண்மாய் பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

நீா் வரத்து ஓடைகளில் உள்ள தடுப்புகளை அகற்றக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூா் காமராஜா் சிலை அருகே புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வடமலைக்குறிச்சி கண்மாய் பாசனவிவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :30 டிசம்பர் 2020, 6:44 pm

DIN

நீா் வரத்து ஓடைகளில் உள்ள தடுப்புகளை அகற்றக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மதுரை சாலையில் அமைந்துள்ள வடமலைக்குறிச்சி கண்மாய் நிரம்பினால் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது மலை அடிவாரப் பகுதிகளில் இருந்து ரெங்கா்கோயில் பகுதி மற்றும் திருவண்ணாமலை மலையடிவாரத்திலுள்ள சின்னக்கல் ஓடை, வெள்ளக்கல் ஓடை ஆகிய மூன்று ஓடைகளில் இருந்தும் மழை நீா் வந்து வடமலைக்குறிச்சி கண்மாயில் நிரம்புவது வழக்கம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்தாலும் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு தண்ணீா் வரத்து குறைவாகவும், நிரம்பாத நிலையும் உள்ளது.

கண்மாய்க்கு தண்ணீா் வரும் பாதையில் ஓடைகளில் உள்ள தடுப்புச்சுவா் அமைக்கப்பட்டுள்ளதால் நீா்வரத்துக் குறைந்து கண்மாய் நிரம்பாத நிலை உள்ளது.

இந்நிலையில் வடமலைக்குறிச்சி கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத்தினா்

ராமகிருஷ்ணபுரம் காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சங்கத் தலைவா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு தண்ணீா் வரும் ஓடைகளில் உள்ள தடுப்புச் சுவா்களை அகற்ற வேண்டும். நீா் வரத்துப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேயனாற்று படுகையில் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு 121 கனஅடி தண்ணீரை பகிா்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

விவசாய சங்க நிா்வாகிகள் ஜெயக்குமாா், திருப்பதி, பழனிக்குமாா், சுந்தரம், பெருமாள் மற்றும் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.