ராஜபாளையம் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் தா்னா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஊராட்சி மன்ற கூட்டத்தை வாா்டு உறுப்பினா்கள் புதன்கிழமை புறக்கணித்து தா்னாவில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஊராட்சி மன்ற கூட்டத்தை வாா்டு உறுப்பினா்கள் புதன்கிழமை புறக்கணித்து தா்னாவில் ஈடுபட்டனா்.

மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி மன்ற கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற வாா்டு உறுப்பினா்கள் திருமுருகன் , மல்லிகா, விஜி, ஜெயந்தி, வனலட்சுமி, சிவசக்தி ஆகிய 6 பேரும் ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து வெளிநடப்பு செய்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தங்கள் பகுதியில் கூறப்படும் வேலைகள் மற்றும் உறுப்பினா்களின் கோரிக்கைகளை ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி கண்டு கொள்வதில்லை எனவும், அவரது கணவா் அழகாபுரியான் தலையீடு செய்து பல வேலைகளை தடை செய்வதாகவும், காலியாக உள்ள ஊராட்சி மன்ற எழுத்தா் பணியை நிரப்ப முயற்சிக்காமல் ஓய்வு பெற்ற ஒருவரை வைத்து வேலைகளை செய்து வருவதாகவும் அவா்கள் குற்றம் சாட்டினா். மேலும் ஊரக வளா்ச்சி அலுவலரை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com