நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செல்போன் டவர் மீது ஏறி 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆட்டோ ஓட்டுநர் போராட்டம்: விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் பாண்டியன் நகரில் ஆட்டோ ஓட்டுநரான முனியாண்டி என்பவர், காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாகவும் கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

News image
Updated On :11 ஜூன் 2020, 3:18 am

DIN

விருதுநகர் பாண்டியன் நகரில் ஆட்டோ ஓட்டுநரான முனியாண்டி என்பவர், காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாகவும் கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

விருதுநகர் பாண்டியன் நகர் சின்ன குருசாமி தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (38). ரௌடி பட்டியலில் பெயர் உள்ள இவர் மீது கொலை மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இவர், தன்னை காவல்துறையினர் அடிக்கடி துன்புறுத்துவதாக கூறி பாண்டியன் நகரில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். 

மேலும் கையில் பெட்ரோல் கேனுடன் உள்ளார். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் அவரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் கடந்த மூன்று மணி நேரத்துக்கும் மேலாக டவர் மீது இருந்து கொண்டு கீழே இறங்க மறுத்து வருகிறார்.
 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.