திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

நடிகை த்ரிஷா வளர்க்கும் நாய்க் குட்டி! யார் கொடுத்தது?

நடிகை த்ரிஷா வளர்க்கும் இஸ்ஸி நாய்க் குட்டி குறித்து திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ள தகவல் பற்றி...

News image

த்ரிஷாவின் நாய்க் குட்டியைக் கொஞ்சும் விஜய் - Instagram | Trisha Krishnan

Updated On :2 ஜூலை 2026, 8:37 pm IST

நடிகை த்ரிஷா வளர்க்கும் நாய்க் குட்டி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பேசியது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நடிகை த்ரிஷா, நாய்கள் மீது அதீத பிரியம் கொண்டவர். படப்பிடிப்புகள் இல்லாத நேரங்களில் நாய்களுடனேயே தனது நேரத்தை த்ரிஷா செலவிடுவார்.

இந்த நிலையில், அவரின் மகளாக நினைத்து ஆசையாக வளர்த்து வந்த ஸோரோ என்ற நாய், 2024 கிறிஸ்துமஸ் நாளில் இறந்தது. இதனால் மிகவும் மன உளைச்சலுக்குள்ளான த்ரிஷா, அதனை சமூக ஊடகத்திலும் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில்தான், அவருக்கு ஆறுதலாக குடும்பத்தில் மீண்டும் ஒரு நாய்க்குட்டி வந்ததாகவும், அதற்கு இஸ்ஸி என்று பெயர் சூட்டிருப்பதாகவும் த்ரிஷா தெரிவித்தார்.

இதனிடையே, இஸ்ஸி நாய்க்குட்டியானது தன்னுடைய பூடில் வகை டெடி நாயின் குட்டிதான் என ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

விஷ்ணு விஷாலின் மனைவியும் த்ரிஷாவும் நெருங்கிய நண்பர்கள் என்றும், அவர்கள் இருவரும் அடிக்கடி நாய்கள் பற்றித்தான் அதிகம் பேசுவார்கள் என்றும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

விஷ்ணு விஷால் , நடிகை த்ரிஷா

விஷ்ணு விஷால் , நடிகை த்ரிஷா - எக்ஸ்

Summary

Vishnu Vishal on Izzy, the dog raised by actress Trisha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.