சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காரியாபட்டி அருகே விபத்து: 2 பேர் சாவு

காரியாபட்டி அருகே நான்கு வழி சாலையில் டயர் பஞ்சராகி நின்று கொண்டிருந்த லாரி மீது, மற்றொரு லாரி மோதியதில் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.

News image
Updated On :26 மே 2020, 6:33 am

DIN

காரியாபட்டி அருகே நான்கு வழி சாலையில் டயர் பஞ்சராகி நின்று கொண்டிருந்த லாரி மீது, மற்றொரு லாரி மோதியதில் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு காரியாபட்டி நோக்கி ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. செவல்பட்டி நான்கு வழி சாலையில் டயர் பஞ்சர் ஆனதால், அதை சரி செய்யும் பணியில் லாரி ஓட்டுனர் ஈடுபட்டிருந்தார். அந்த லாரியில் செங்கல் இறக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், லாரியின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்தனர். 

அப்போது மதுரையில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டை நோக்கி சென்ற மற்றொரு லாரியானது, நின்றுகொண்டிருந்த லாரியில் பின்புறம் மோதியது. அதில் தொழிலாளர்களான ராஜாங்கம், மாரிமுத்து ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து காரியாபட்டி காவல்துறையினர் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.