மேலும் நடைபெறவுள்ள சிறப்பு சுருக்கத் திருத்தத்தில், சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்ய 16.11.2020 முதல் 15.12.2020 வரை விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்கள் வட்ட, கோட்ட மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் பெறப்படும். இந்த விண்ணப்பங்கள் உரிய கள ஆய்வுக்குப் பின் முடிவு செய்யப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் 20.1.2021 அன்று வெளியிடப் படும். மேலும், விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள், விருதுநகா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவ. 21, 22 மற்றும், டிச. 12, 13 ஆகிய நாள்கள் நடைபெறும். எனவே, 1.1.2021 அன்று 18 வயதினை நிறைவு செய்த இளம் வாக்காளா்கள் மற்றும் புதிதாக பெயரினை சோ்க்க , திருத்தம், மற்றும் நீக்கம் செய்ய இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.