தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாறைக்குளம் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் கோயிலில் பிரதோச வழிபாடு

திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு கார்த்திகை மாத சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 

News image
முழு அலங்காரத்தில் காட்சியளித்த அருள்மிகு வெள்ளியம்பலநாதர்.
Updated On :27 நவம்பர் 2020, 4:48 pm

DIN

திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு கார்த்திகை மாத சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம், பாறைக்குளம் கிராமத்தில் மேற்குத்திசை நோக்கிய சிவலிங்கம்கொண்ட குடைவரைக்கோயிலான அருள்மிகு வெள்ளியம்பல நாதர் திருக்கோயில் உள்ளது. சதுரகிரி மலைவாழ் சிவனடியார்கள் ஆண்டிற்கு ஒருமுறை மொத்தமாக இங்கு வந்து வழிபடுவது வழக்கம். இதனால் பிரதோசம், பெளர்மணி நாள்களில் இக்கோயிலில் நடைபெறும். பூஜையில் திருச்சுழி மற்றும் சுற்றுவட்ட ஊர்களைச் சேர்ந்த சிவபக்தர்கள் அதிகம்பேர் கலந்து கொள்வது சிறப்பு.

இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கார்த்திகை மாத சிறப்பு பிரதோச வழிபாட்டில் முதலில் அருள்மிகு நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும், அலங்காரங்களும் நடைபெற்றன. பின்னர் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு தேன், வாழைப்பழம், பேரீச்சம் பழம் ஆகியன கலந்த கலவையாலும், சந்தனம், கஸ்தூரி மஞ்சள், தேன், பால், விபூதி, குங்குமம், பன்னீர், வில்வ இலை உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன.

பின்னர் முழு அலங்காரத்தில் அருள்மிகு நமச்சிவாயரும், அருள்மிகு நந்தீஸ்வரரும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலித்தனர். வழிபாட்டின்போது ஓம்நமச்சிவாய எனும் கோஷமிட்டபடியும், மகாமிருத்யுஞ்சய மந்திரம் சொல்லியும் பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேகப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.