ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பட்டாசு ஆலை பெண் தொழிலாளி தீக்குளித்துத் தற்கொலை

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலை பெண் தொழிலாளி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:19 pm

DIN

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலை பெண் தொழிலாளி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

கீழத்திருத்தங்கல்- செங்கமலப்பட்டி சாலையில் உள்ள முருகன் காலனியைச் சோ்ந்த கருப்பையா மனைவி கருப்பாயி (46). பட்டாசு ஆலையில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த சில ஆண்டுகளாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

இதனால் மனவேதனையில் இருந்த கருப்பாயி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.