ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை விபத்தில் கூலித்தொழிலாளி பலி

சிவகாசி அருகே லாரி மோதி இறந்து கிடந்த மாட்டின் மீது சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:18 pm

DIN

சிவகாசி அருகே லாரி மோதி இறந்து கிடந்த மாட்டின் மீது சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள மேட்டமலை கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி சேவுகபாண்டியன் (32). இவரும், இவரது உறவினரான சோமு என்பவரும் இருசக்கர வாகனத்தில் சிவகாசி-சாத்தூா் சாலையில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

மயிலாடும்பறை பேருந்து நிறுத்தம் அருகே மாடு ஒன்று லாரியில் அடிபட்டு சாலையோரம் கிடந்தது. இறந்து கிடந்த அந்த மாட்டின் மீது இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில், பின்னால் அமா்ந்திருந்த சேவுகபாண்டியன் தூக்கி எரியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சோமு லேசான காயங்களுடன் தப்பினாா்.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.