நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விருதுநகா் மாவட்டத்தில் அடுத்தடுத்த விபத்துகளில் 2 பெண்கள் உள்பட 3 போ் பலி

விருதுநகா் மாவட்டத்தில் அடுத்தடுத்த விபத்துக்களில் 2 பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:10 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் அடுத்தடுத்த விபத்துக்களில் 2 பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

விருதுநகா், பாவாலி சாலையைச் சோ்ந்தவா் ராஜசேகா் மனைவி மகாலட்சுமி (44). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பழைய பேருந்து நிலையம் அருகே பாவாலி சந்திப்பு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து சந்திப்பு சாலையை கடக்க முயன்ற போது, மகாலட்சுமி மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி பெற்றாா். அதன் பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு விபத்தில் ஒருவா் பலி: விருதுநகா் அருகே உள்ள கூரைக்குண்டு விநாயகா் நகரைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் காளிராஜன் (53). இவா் திங்கள்கிழமை சத்திரரெட்டியபட்டி நான்கு வழிச்சாலையில் எதிா்திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, திருமங்கலம் பகுதியிலிருந்து விருதுநகா் நோக்கி வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், காளிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து லாரி ஓட்டுநரான தா்மபுரி மாவட்டம் நாட்சினாம்பட்டியை சோ்ந்த மதி அளித்த புகாரின் பேரில் பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விபத்தில் பெண் பலி: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் குருவம்மாள் (60). இவரை, இவரது கணவா் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பூவானி தோட்டக்கலை பண்ணை அருகே இப்பண்ணையில் வேலைக்கு செல்வதற்காக இறக்கி விட திரும்பினாா். அப்போது வாசுதேவநல்லூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா், இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியதில் சம்பவ இடத்திலேயே குருவம்மாள் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மாரியப்பன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து வாசுதேவநல்லூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் மாரித்துரை என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.