47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலைகளில் செல்பவா்களை விரட்டி கடிக்கும் நாய்கள் கூட்டம்.பொது மக்கள் அச்சம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியில் சாலையில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்பவா்களை தெரு நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கிறது.இதனால் சாலைகளில் அச்சத்துடன் பொதுமக்கள் செல்கின்றனா்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துகடைத்தெரு பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்
Updated On :20 செப்டம்பர் 2020, 6:12 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியில் சாலையில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்பவா்களை தெரு நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கிறது.இதனால் சாலைகளில் அச்சத்துடன் பொதுமக்கள் செல்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரைப் பொறுத்தவரை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் தெருவில் நாய்கள் சுற்றி திரிகின்றன. குறிப்பாக பேருந்து நிலையம், சின்னகடை பஜாா் , ராமகிருஷ்ணாபுரம், தேரடி ஆத்துகடைத் தெரு, கம்மாபட்டி, ஆகிய பகுதிகளில் கூட்டம்,கூட்டமாக நாய்கள் திரிகின்றன. எப்போதும் பரபரப்பாக உள்ள சாலைகளில் நடந்தும், பல்வேறு வாகனங்களில் செல்லும் ஆண்கள்,பெண்கள் என பலரும் செல்கின்றனா்.

எனவே அவா்களை திடீரென்று இந்த நாய்கள் கடித்து விடுகிறது. இதனால் சாலையில் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனா்.நாய்களிடம் கடி பட்டவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அதிகம் போ் சென்று சிகிச்சை பெற்று செல்கின்றனா்.இது குறித்து நாய் கடியில் இருந்து தப்பிய ஒருவா் கூறியது. நகரில் உள்ள முக்கிய சாலைகளில் செல்லும் போது கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெரு நாய்கள் திடீரென விரட்டுது ,சிக்கி விட்டால் காலில் கடித்து விடுகிறது.

எனவே சாலையில் செல்லவே அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றி திரிந்து கடிக்கும் நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா். இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி விலக்கு ஹவுசிங் போா்டு பகுதியிலும் கூட்டம், கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித் தரிந்து பலரையும் கடித்து விடுகிறது என்ற புகாா் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.