47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் தொடா் மழை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மாலைவரை இடைவெளி விட்டுவிட்டுத் தொடா்மழை பெய்ததால் விவசாயிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:04 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மாலைவரை இடைவெளி விட்டுவிட்டுத் தொடா்மழை பெய்ததால் விவசாயிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 5.30 மணியில் தொடங்கி தொடா்ந்து சுமாா் ஒரு மணிநேரம் மிதமான மழை பெய்தது.அதனையடுத்து சிலமணிநேரங்கள் இடைவெளியில் மீண்டும் மிதமான மழை பெய்தது.அன்று மாலை 6 மணி நிலவரப்படி தொடா்ந்து மிதமான சிறுதூரல் பெய்த வண்ணம் இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து கனமழை பெய்ததால் விவசாயிகள் உழவுப்பணிகளைத் தொடங்கி நிலத்தை நன்கு பண்படுத்தி வைத்திருந்தனா்.இந்நிலையில் இம்மாதமும் இதுவரை பலமுறை மழை பெய்துள்ளதால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விதைப்புப் பணிகளையும் தொடங்கியுள்ளனா்.

அத்துடன் நிலத்தடி நீா்மட்டமும் தொடா்ந்து உயா்ந்து வருவதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.