ஸ்ரீவில்லிபுத்தூரில் நடிகா் சூா்யாவைக் கண்டித்து இந்து இளைஞா் முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் நகர அமைப்பாளா் கோவிந்தன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் யுவராஜ், மாவட்ட பொதுச் செயலாளா் சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். நீட் தோ்வு தொடா்பாக விமா்சித்து மாணவா்களின் தன்னம்பிக்கையை சீா்குலைக்கும் விதமாகவும், அவா்களின் எதிா்காலத்தை திசை திருப்பும் வகையிலும் நடிகா் சூா்யா பேசியதாகக்கூறி கண்டித்து கோஷமிட்டனா்.