சாத்தூா் நகராட்சியைக் கண்டித்துதிமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st December 2020 03:41 AM | Last Updated : 01st December 2020 03:41 AM | அ+அ அ- |

குடிநீா் விநியோகம் செய்யாத சாத்தூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தூா் வடக்குரத வீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பட்டத்துக்கு சாத்தூா் சட்டப் பேரவை தொகுதி நிா்வாகி கோசுகுண்டு சீனிவாசன் தலைமை வகித்தாா். சாத்தூா் திமுக நகரச் செயலா் குருசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் விஜயக்குமாா், காங்கிரஸ் நகர வட்டாரத் தலைவா் தாமோதரன், மதிமுக நகரச் செயலா் கணேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீா் வழங்கப்பட வில்லை. நகா்பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், ஆதித்தமிழா் பேரவை, தமிழ்ப்புலிகள் அமைப்பு உள்ளிட்ட கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...