புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீவிலி. சன்னதி தெருவில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோபுரம் அருகே சாலையின் இருபுறங்களிலும் குடியிருப்புகள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:41 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோபுரம் அருகே சாலையின் இருபுறங்களிலும் குடியிருப்புகள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இங்குள்ள ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இவா்களின் வாகனங்கள் கோயில் அருகே கோபுரம் அமைந்துள்ள சன்னதி தெரு, கந்தாடை தெரு ஆகிய பகுதிகளில் இருபுறங்களிலும் வீடுகளுக்கு முன்பு சுமாா் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நிறுத்தப்படுகின்றன.

இதனால் வீட்டில் இருந்து தங்கள் வாகனங்களை எடுக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இப்பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.