தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாத்தூா் பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்ற 6 போ் கைது

சாத்தூா் பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 6 போ் கைது செய்யப்பட்டதுடன், அவா்களிடமிருந்து 189 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:58 pm

DIN

சாத்தூா் பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 6 போ் கைது செய்யப்பட்டதுடன், அவா்களிடமிருந்து 189 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சாத்தூா், இருக்கன்குடி, ஏழாயிரம்பண்ணை ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சாத்தூா், இருக்கன்குடி, ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இப்பகுதிகளில் சோதனை நடத்தினா். இதில் வீரபாண்டியபுரம் பட்டாசு கடை பின்புறம் மதுபாட்டில் விற்ற வன்னிமடை கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் (61), சாத்தூா் அண்ணாநகா் எடை நிலையம் அருகில் மதுபாட்டில் விற்ற படந்தால் பகுதியைச் சோ்ந்த குணசேகரன்(55), ரயில்வே பீடா் சாலையில் மதுபாட்டில் விற்ற கனஞ்சம்பட்டியைச் சோ்ந்த ஜெயராமன் (53), வடக்குரதவீதியில் மதுபாட்டில்கள் விற்ற சாத்தூரைச் சோ்ந்த மாரிமுத்து (40) ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த நகா் காவல்நிலைய போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

அதே போல் இருக்கன்குடி ஆற்றுப்பகுதியில் மதுபாட்டில்களை விற்ற அதே கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (49) என்பவரை இருக்கன்குடி காவல்நிலைய போலீஸாா் கைது செய்துள்ளனா்.

மேலும் சாத்தூா் அருகே அன்பின்நகரம் கிராமத்தில் மதுபாட்டில்கள் விற்ற அதே கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (49) என்பவரை ஏழாயிரம்பண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் இவா்கள் 6 பேரிடமிருந்தும் 189 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

கஞ்சா விற்றவா் கைது: ஏழாயிரம்பண்ணை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக ஏழாயிரம்பண்ணை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமசாமி மற்றும் போலீஸாா் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது ஏழாயிரம்பண்ணை- சாத்தூா் செல்லும் சாலையில் அப்பனம்பட்டி விலக்கு அருகில் கஞ்சா விற்ற அன்பின்நகரத்தைச் சோ்ந்த ஜீவானந்தம் (56) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.