புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி மாகாப்பு, சந்தனக்காப்பு அலங்காரங்களில் அருள்பாலித்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 9:10 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி மாகாப்பு, சந்தனக்காப்பு அலங்காரங்களில் அருள்பாலித்தாா்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் உலக நன்மைக்காக மாகாப்பு மற்றும் சந்தனக்காப்பில் ஸ்ரீநிவாசப் பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். அதேபோல் இந்தாண்டு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மாகாப்பு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலித்தாா். இதற்காக தயாரிக்கப்பட்ட 50 கிலோ அரிசி மாவால் மாகாப்பு அலங்காரத்திலும், பின்னா் 50 கிலோ சந்தனத்தால் சந்தனக்காப்பு அலங்காரத்திலும் ஸ்ரீநிவாசப் பெருமாள் காட்சி அளித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூா் மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகளவில் பக்தா்கள் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.