‘விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி விரைவில் திறக்கப்படும்’
விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன் தெரிவித்தாா்.

சாத்தூரில் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்ற அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் ரகுராமன் உள்ளிட்டோா்.








