47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாட்சியாபுரம், திருத்தங்கல் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் கட்டுவது குறித்து ஜூலை 8 -இல் கருத்துக் கேட்புக்கூட்டம்

சாட்சியாபுரம் மற்றும் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக ஜூலை 8 ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகாசி வட்டாட்சியா் ராம்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 ஜூன் 2021, 4:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் சாட்சியாபுரம் மற்றும் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக ஜூலை 8 ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகாசி வட்டாட்சியா் ராம்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாட்சியாபுரத்திலும், திருத்தங்கலிலும், ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக நில உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்சேபனை குறித்து, விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஜூலை 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு, சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுவிசாரணை மற்றும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது நில உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை கூறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.