47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அருப்புக்கோட்டையில் மிதமான மழை

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்றுடன் இதமான தட்ப வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

News image
அருப்புக்கோட்டை மலையரசன்கோவில் சாலையை அடுத்த பிரதான வீதியொன்றில் வியாழக்கிழமை பெய்த மழைக்கு வீதியில் ஓடிய மழைநீர்.
Updated On :24 ஜூன் 2021, 1:12 pm

DIN

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்றுடன் இதமான தட்ப வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் கடந்த பல நாட்களாக பகலில் கடும் வெயிலுடன் கூடிய, வறண்ட வானிலையே காணப்பட்டது. இதனிடையே வியாழக்கிழமையும் பகலில் கடும் வெய்யில் அடித்து வந்தநிலையில், மாலை கருமேகங்கள் திரண்டு சுமார்ல 5.35 மணிமுதல் தொடர்ந்து சுமார் 40 நிமிடங்கள்வரை மிதமான மழை பெய்தது. 

இடிமின்னலின்றி, அதிக காற்றுவீச்சும் இன்றி பெய்த இம்மழையால், சாலைகளில் வெள்ளநீர் திரண்டு ஓடியது. பள்ளமான பகுதிகளான திருவள்ளுவர் நகர், மணிநகரம், நாகலிங்கா நகர் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைக்குப்பின்னர் இதமான குளிர்ந்த தட்ப வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.