புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோயில் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

ராஜபாளையம் அருகே கோயில் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:29 pm

DIN

ராஜபாளையம் அருகே கோயில் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டான் பகுதியில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூசாரி மாரியப்பன், செவ்வாய்க்கிழமை காலை பூஜை செய்யச் சென்றபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அவா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 9 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமாா் ரூ.15 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் கைரேகை நிபுணா் மற்றும் மோப்பநாய் உதவியுடன் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.