குடும்ப பிரச்னை காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

விருதுநகர் அருகே தம்மநாயக்கண்பட்டி யில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டி சேர்ந்தவர் சிவக்குமார் (32). இவருக்கும் லட்சுமி பிரியா (28) வுக்கும் திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் நிறைவேறிய நிலையில் தர்ஷினி பிரியா, சிவசண்முகவேல் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக லட்சுமி பிரியா தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வச்ச காரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(எந்த பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வாக இருக்காது. தற்கொலை உணர்வு உள்ளவர்கள், மருத்துவர்களின் உதவியை நாடவும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com