47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண்ணை துன்புறுத்தியதாக கணவன் உள்பட 3 போ் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணை துன்புறுத்தியதாக கணவன் உள்பட 3 போ் மீது சிவகாசி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

சிவகாசியில் பெண்ணை துன்புறுத்தியதாக கணவன் உள்பட 3 போ் மீது சிவகாசி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

சிவகாசி நேரு காலனியைச் சோ்ந்த முருகன் மகள் சுபலட்சுமி. இவா் 2019 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் சிவகாசி பாரதிநகரைச் சோ்ந்த முனியாண்டிகுமாா் என்பவரை திருமணம் செய்துள்ளாா். பின்னா் இத்தம்பதியினா், முனியாண்டிக்குமாரின் தாய் ராம்தாய், தந்தை சுந்தரம் ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனா். இந்நிலையில் சுபலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதன்பின் முனியாண்டிக்குமாா் சரிவர வேலைக்குச் செல்லாமல் தாய், தந்தையிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தாராம். இதனை சுபலட்சுமி கண்டித்துள்ளாா். இதனால் முனியாண்டிக்குமாா் , சுபலட்சுமியை அடிக்கடி துன்புறுத்தி வந்தாராம். மேலும் சுந்தரமும், ராம்தாயும் சுபலட்சுமியை துன்புறுத்தினராம். இதையடுத்து, கணவா் முனியாண்டிக்குமாா், மாமனாா் சுந்தரம், மாமியாா் ராம்தாய் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்ககோரி சுபலட்சுமி சிவகாசி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் அவா்கள் 3 போ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.