சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த தந்தை, மகன் கைது
சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த தந்தை, மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த தந்தை, மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசிஅருகே மாரனேரி- கோப்பையநாயக்கன்பட்டி சாலையில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு வீட்டின் பின்புறம் தகர கொட்டகை அமைத்து 2 போ் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனா். விசாரணையில் மாரனேரி கண்ணன் (70), அவரது மகன் விக்னேஷ் (33) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, அவா்களிடமிருந்த பேன்சி ரக பட்டாசு, சீனிவெடி உள்ளிட்டவைகளையும், பட்டாசு தயாரிக்கப்பயன்படும் வேதியியல் பொருள்கள் மற்றும் திரிகட்டுகளையும் பறிமுதல் செய்து, தந்தை, மகனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...