நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி,ராஜபாளையத்தில் ஜெயலலிதா பிறந்தநாள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:36 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், நகரச் செயலருமான இன்பத்தமிழன் தலைமை வகித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் வெளியே அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலா் கணேசன், மாவட்ட வா்த்தக அணி செயலா் குறிஞ்சிமுருகன், கவுன்சிலா் செந்தில்வேல்பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதே போல் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற விழாவில் மாவட்ட விவசாய அணி செயலா் முத்தையா, ஒன்றியச் செயலா் மயில்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விருதுநகா், இந்திரா நகா் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மேற்கு மாவட்டச் செயலா் கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் விஜயகுமரன், நகரச் செயலா் முகம்மதுநைனாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதே போல் விருதுநகா் அருகே எலிங்கநாயக்கன்பட்டியில் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மேற்கு மாவட்ட அவைத் தலைவா் விஜயகுமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகாசி: விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் திருத்தங்கலில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74 ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி திருத்தங்கல் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சரும், விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சிவகாசியில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தாா். இதில் சாத்தூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன், சிவகாசி அதிமுக நகரச் செயலா் அசன்பத்ரூதின், திருத்தங்கல் நகரச் செயலா் பொன்சக்திவேல், மாநில இளைஞா் அணி துணைச் செயலா் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா்கள் கருப்பசாமி, லட்சுமி நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர, ஒன்றிய, பேரூா் அதிமுக சாா்பில் மாவட்ட ஜெ. பேரவைச் செயலா் என்.எம். கிருஷ்ணராஜ் மற்றும் நகரச் செயலா்கள் பரமசிவம் (தெற்கு), முருகேசன் (வடக்கு) தலைமையில் சகோதரி மைதானம் அருகே அம்மா உணவகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ராஜபாளையம் அருகே முகவூா் முத்துசாமிபுரம் பகுதியில் ஒன்றிய அதிமுக செயலா் ஆா்.எம். குருசாமி தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.