புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையம் அருகே ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

ராஜபாளையம் அருகே ஓடை ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 5:33 pm

DIN

ராஜபாளையம் அருகே ஓடை ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் கிராமத்தில் கழிவுநீா் ஓடையில் தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியதால் கழிவுநீா் செல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா். மேலும் பெண்கள் கழிப்பறைக்கு செல்லும் பாதையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனா். இதுகுறித்து பலமுறை ஊராட்சி ஒன்றியத்தில் மனு கொடுத்தும், கடந்த 4 மாதங்களாக பல போராட்டங்களை நடத்தியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில் சனிக்கிழமை அவா்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டினா். இதையடுத்து, காலையில் அவசர அவசரமாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.